8.11.17

என் முதல் பார்வை...


அனைத்தும் அழகு
அனைத்திலும் நீ அழகு

உன் விழியை
என் குழந்தை பருவதோடு
பார்த்த என்னால் முடியவில்லை

தடுமாறி இளைஞனாய்
ஓர் காதலனாய்
என்னை அறியாமல்
 தஞ்சம் புகுந்தேன் காதலுக்குள்

நீ தான் உலகம் என்று
நீ இல்லாமல் ஏது உலகமென்று...

நீ உறங்கியதால்...


விடை தெரியாமல்
எனது இரவும்,
நொடி அறியாமல்
எனது விழிகளும்
உறங்க மறுக்கின்றன
சொல்லிக்கொல்லாமல் நீ உறங்கியதால்...

உயிர் வரை...


நீ அனுப்பும்
முத்த வரிகளை படிக்கையில்
உயிர் வரை பாய்கிறது
உன் எச்சில்...

அடிமை ஆக்காதே...


மௌனமாய் அழைக்கும் போதே
என் செவிகளில்
ஆயிரம் முறை ஒளிகிறது - வேண்டாம்
சத்தமாக அழைத்து
என் இதயத்தை
உனக்கு அடிமை ஆக்காதே...

கையொப்பம் இடுவேன்...


என்னை
தானம் செய்ய சொன்னால்
அனைத்தையும் எடுத்துக்கொள்ள
கையொப்பம் இடுவேன்

நீ என் அருகில் இருக்கும்
இந்த நொடியை தவிர...

நடை பழகு...

நீ நடை பழக - இந்த
தந்தையின் நெஞ்சம்
எப்போதும் காத்திருக்கும்

என் இதய துடிப்பையும்
நிறுத்தி வைப்பேன்
உன் கால் கொலுசின்
ஓசையை ரசிக்க....

செல்லமே நடை பழகு...

இத்தனை அழகா?

அருகில் அமர்ந்துகொண்டு
பார்க்கிறேன்

என் கவிதை
இத்தனை அழகா?

உறங்கும்பொழுது கூட...

நீ பேசா கவிதை....


என் மனதில் இருக்கும் 
ஒவ்வொரு வலிக்கும் 
நீயே மருந்து 

என் கவலைகளை 
உன் மழலை பேச்சால் 
தினம் தினம் களைகிறேன் 

உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் 
என் வாழ்க்கைக்கு இலக்கணங்கள் 

இலக்கண பிழையாய் 
அவ்வபோது உன் மௌனங்கள் 

அதையும் ரசிக்கிறேன் 
நீ பேசா கவிதைகளில் 
இதுவும் ஒன்றென்று...

அன்பின் உருவே...


நீ மட்டுமே...


சொல்ல முடியும்...

அழகோவியமே...